புரோ கபடி லீக் தொடரின், இறுதி கட்ட லீக் சுற்றுகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று (பிப்ரவரி 13), தெலுங்கு டைட்டன்ஸ் அணிக்கு எதிராக பாட்னா பைரேட்ஸ் அணி மோதியது. இதில், புள்ளிப் பட்டியலில் 4வது இடத்தில் இருக்கும் பாட்னா பைரேட்ஸ் அணிக்கு இணையாக தெலுங்கு டைட்டன்ஸ் போட்டியிட்டது.
மிகவும் விறுவிறுப்பாக சென்ற இந்த ஆட்டத்தில் 38-36 என்ற புள்ளிக் கணக்கில், பாட்னா அணி வெற்றி பெற்றது. இதன் விளைவாக பாட்னா பைரேட்ஸ் அணி 68 புள்ளிகளுடன் 4வது இடத்தை தக்க வைத்துக் கொண்டது. இன்றைய (பிப்ரவரி 14 ) போட்டியில் தமிழ் தலைவாஸ் – தபாங் டெல்லி அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளனர். இப்போட்டியானது இரவு 8 மணிக்கு தொடங்க உள்ளதும் குறிப்பிடத்தக்கது.