சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியல் இப்பொழுதுதான் சூடு பிடிக்க துவங்கியுள்ளது. வீட்டு பெண்கள் மீது குணசேகரன் போலீஸ் ஸ்டேஷனில் கம்ப்ளைன்ட் கொடுத்ததால் கதிர், ஞானம், சக்தி எல்லோரும் கடும் கோபத்தில் உள்ளனர். மேலும் அவர்கள் மீது கொடுத்த கம்ப்ளைன்ட் வாபஸ் வாங்க வேண்டும் என குணசேகரனை சக்தி எச்சரிக்கிறார். இப்படி இருக்கும் சூழலில் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில் சக்தி குணசேகரனிடம் இப்போ வீட்டுப் பெண்கள் ஜெயிலில் இருக்க காரணமே நீங்கதான் என சண்டை போடுகிறார்.
அந்த நேரத்தில் விசாலாட்சி குணசேகரனுக்கு ஆதரவாக பேசுகிறார். அப்போது கதிர் தன் அம்மாவிடம் எப்ப பார்த்தாலும் உங்க புள்ள பண்றதையே நியாயப்படுத்தி பேசுவீங்களா? அவரு என்ன எல்லாம் செய்திருக்கிறார் என்று தெரியுமா என்கிறார். மேலும் கதிர் ஏதோ உண்மைகளை விசாலாட்சியிடம் சொல்கிறார். இதை கேட்டு விசாலாட்சி ஆடிப் போகிறார். இந்த ப்ரோமோவை வைத்து பார்க்கும்போது நிச்சயம் அப்பத்தா, ஜீவானந்தம் மனைவி சாவுக்கு குணசேகரன் தான் காரணம் என்ற உண்மையை தன் அம்மாவிடம் கதிர் சொல்லி இருப்பார். மேலும் இதை வைத்து கதிர் குணசேகரனை பிளாக்மெயில் செய்யவும் வாய்ப்பு உள்ளது. இதனால் அடுத்து வரும் காட்சிகள் அனல் பறக்க ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.