தமிழகத்தில் வருகிற மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நடப்பு ஆண்டுக்கான முதல் சட்டசபை கூட்டத்தொடர் நேற்று முன்தினம் (பிப்.12) தொடங்கியது. அதைத் தொடர்ந்து வருகிற பிப்ரவரி 19ஆம் தேதி 2024-25 ஆம் நிதியாண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டசபையில் தாக்கல் செய்ய உள்ளார். அதன்பின் பிப்.22 ஆம் தேதி வரை பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற இருப்பதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்து இருந்தார்.
பில்கிஸ் பானு வன்கொடுமை வழக்கு., தீர்ப்பு மறு ஆய்வு., குஜராத் அரசு உச்சநீதிமன்றத்தில் மனு!!
இந்நிலையில் சென்னை மாநகராட்சியின் 2024-25 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட், வரும் பிப்ரவரி 21ஆம் தேதி தாக்கல் செய்ய உள்ளதாக மேயர் பிரியா அறிவித்துள்ளார். அதைத்தொடர்ந்து பிப்.22 ஆம் தேதி பொது விவாதம் நடைபெற இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதில் பல்வேறு விதமான புதிய திட்டங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.