குஜராத்தில் 2002 ஆம் ஆண்டு நடந்த மதக் கலவரத்தில் பில்கிஸ் பானு என்ற கர்ப்பிணி பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி இருந்தார். மேலும் அவரது மகள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் இந்த வன்முறையில் கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 11 குற்றவாளிகளுக்கு 2008 ஆம் ஆண்டு மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவிட்டது. இப்படி இருக்கையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 11 குற்றவாளிகளுக்கும் விடுதலை வழங்கி குஜராத் அரசு உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து பில்கிஸ் பானு இவர்கள் விடுதலையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு கொடுத்திருந்தார்.
இதனை விசாரித்த நீதிபதி குஜராத் அரசின் உத்தரவை ரத்து செய்து குற்றவாளிகளை மீண்டும் சிறையில் சரணடையும் படி உத்தரவிட்டார். மேலும் அந்த தீர்ப்பில் குஜராத் அரசு குறித்து சில கருத்துக்களை நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இவ்வாறு உச்சநீதிமன்றம் தெரிவித்த இந்த கருத்துக்கள் குஜராத் அரசின் மீது தவறான எண்ணம் ஏற்படும்படி அமைந்துள்ளதாம். இதனால் அந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என குஜராத் அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.