புரோ கபடி தொடரின் 10-வது சீசன் கிட்டத்தட்ட இறுதிகட்டத்தை நெருங்கி விட்டது. இதில் நேற்று நடந்த எலிமினேட்டர் போட்டியில் டபாங் டெல்லி மற்றும் பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்து இரு அணிகளும் மாறி மாறி புள்ளிகளை பெற்றனர். ஆனாலும் கடைசி கட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய பாட்னா பைரேட்ஸ் அணி 37-35 என்ற கணக்கில் திரில் வெற்றி பெற்று அசத்தியது.
இதில் பாட்னா அணி 4 முறை ஆல் அவுட் புள்ளிகளை பெற்றது குறிப்பிடத்தக்கது. மற்றொரு எலுமினேட்டர் போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த ஆட்டத்தில் துவக்கத்தில் இருந்தே சிறப்பாக விளையாடிய ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி 42-25 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளது.