நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. ஆகிய முதுநிலை படிப்புகளுக்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலிங்கிடம் (ஏஐசிடிஇ) அனுமதி பெறுவது கட்டாயமாக பார்க்கப்படுகிறது. ஆனால் ஒடிசா மாநிலத்தில் உள்ள பி.ஜே.பி. தன்னாட்சிக் கல்லூரி, ஷைல பாலா மகளிர் தன்னாட்சிக் கல்லூரி உள்ளிட்ட எட்டு தன்னாட்சி கல்லூரிகள் விதிகளை மீறி முதுநிலை படிப்புகளை செயல்படுத்தி வருவதாக புகார் வந்தது.
இதையடுத்து ஒடிசா மாநில உயர்கல்வித்துறை அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது இந்த எட்டு தன்னாட்சி கல்லூரிகளும் அனுமதி பெறாமல் செயல்படுத்தி வரும் முதுநிலை படிப்புகளுக்கு ஏஐசிடிஇ-யிடம் ஒப்புதல் பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை தொடங்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர்.
Enewz Tamil WhatsApp Channel
காலடி எடுத்து வைத்த முதல் நாளே ரகளை செய்யும் ஸ்ருதி.., ஷாக்கான விஜயா.., அனல் பறக்கும் கதைக்களம்!!!