சென்னையில் கடந்த 16 நாட்களில் மட்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாய்க்கு மேல் அதிகரித்து உள்ள காரணத்தால் வாகன ஓட்டிகள் பெரும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
பெட்ரோல் & டீசல் விலை:
இந்தியாவில் தினந்தோறும் பெட்ரோல் & டீசல் விலை சர்வதேச சந்தை நிலவரத்தைப் பொறுத்து எண்ணெய் நிறுவனங்களால் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. ஆனால் ஊரடங்கின் பொழுது சர்வதேச சந்தையில் விலை அடிமட்டத்திற்கு சென்ற பொழுதும் பெட்ரோல் & டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. இதனால் 82 நாட்களாக ஒரே விலையில் நீடித்த பெட்ரோல் & டீசல் கடந்த 16 நாட்களாக தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருவது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்
ரேஷன் அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் – இன்று முதல் விநியோகம்!!
சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 29 காசுகள் உயர்ந்து 82.87 ரூபாய்க்கும், டீசல் 50 காசுகள் உயர்ந்து 76.40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதாவது கடந்த 16 நாட்களில் மட்டும் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாயும், டீசல் விலை ரூபாயும் உயர்த்தப்பட்டு உள்ளது. ஏற்கனவே கொரோனா ஊரடங்கால் மக்கள் வருமானம் இன்றி தவித்து வரும் வேளையில் இது போன்ற விலை உயர்வுகள் மக்களை பெரும் இன்னலுக்கு உள்ளாக்குகின்றன.