இன்றைய பெட்ரோல், டீசல் விலையில் எந்தவித ஏற்ற, இறக்கம் இல்லாமல் மூன்று நாட்களாக தொடர்ந்து அதே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
விலையில் மாற்றமில்லை:
சர்வதேச எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலையை நிர்ணயம் செய்து மத்திய அரசுக்கு விற்கிறது. அதை கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு தகுந்தாற் போல மத்திய அரசு வழங்குகிறது. மாநிலங்கள் இதை சில்லறை விற்பனையாக, மதிப்பு கூட்டு வரியுடன் வாகன ஓட்டிகளிடம் விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில் பல மாநிலங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டி விற்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த எட்டு நாட்களாக குறையாமல் இருந்த இந்த எரிபொருட்களின் விலை நேற்றைக்கு முந்தைய நாள் சில காசுகள் சரிந்து விற்பனை செய்யப்பட்டு வந்தது. இது பொதுமக்களிடம் சற்று மன நிம்மதியை அளித்தது. இதை அடுத்து, மீண்டும் மூன்று நாட்களாகியும் இந்த விலையில் தற்போது வரை எந்த மாற்றமும் இல்லை. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த அதிருப்தியில் உள்ளனர்.
அதாவது, இன்றைய நிலவரப்படி, தமிழக தலைநகர் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 99 ரூபாய் 08 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு 93 ரூபாய் 38 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மூன்று நாட்களாக அதே விலை நீடித்து வருவதால் இந்த விலையில் எப்போது மாற்றம் வரும் என்பதே மக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்