பெட்ரோல், டீசல் போன்ற எரி பொருட்களின் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து அதே விலையில் விற்கப்பட்டு வருகிறது.
விலையில் மாற்றமில்லை:
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து, எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் போன்ற எரி பொருட்களின் விலையை நிர்ணயம் செய்கின்றன. இதனை அடுத்து மாநிலங்கள் மத்திய அரசிடம் இருந்து கொள்முதல் செய்து சில்லறை விற்பனை செய்யும் போது இந்த எரிபொருட்களின் மீது மதிப்பு கூட்டு வரியை விதிக்கின்றன. இந்த நிலையில், பல இடங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டி விற்கப்பட்டு வந்தது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.
நாட்டின் பல மாநிலங்களில் பெட்ரோல் போன்ற எரிபொருட்களின் விலை சதம் அடித்து அதை தாண்டி விற்பனையாகி வருகிறது. இந்த நிலையில், சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் இந்த எரிபொருட்களின் விலை, இன்றைய பங்கு சந்தை நிலவரங்களை பொறுத்து விற்பனை செய்யப்படும். ஆனால், கடந்த ஒரு வாரமாக இந்த விலையில் எந்த வித ஏற்றமும் இறக்கமும் இல்லை என்ற தகவல் வெளிவந்துள்ளது.
மாநகரில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 99 ரூபாய் 20 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு 93 ரூபாய் 53 காசுகளாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலை, கடந்த ஏழு நாட்களாக எவ்வித மாற்றமும் இல்லாமல், நேற்றைய விலையில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த விலையில் எப்போது மாற்றம் வரும் என பொதுமக்கள் பலத்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்