இறைச்சி, மதுவுக்கு தடை விதித்த மாநில அரசு- அதிர்ச்சியில் குடிமகன்கள்!!

0

உத்தரபிரதேசத்தில் உள்ள மதுராவில் இறைச்சி மற்றும் மதுபான விற்பனைக்கு யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு தடை விதித்துள்ளது.

உத்தர பிரதேசத்தில் உள்ள மதுராவில் நேற்று (30, ஆகஸ்ட் 2021) கிருஷ்ணஜெயந்தி விழா நடைபெற்றது. அதில் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டார். கொரோனா தொற்றை ஒழிக்க, பகவான் கிருஷ்ணரை வேண்டுவதாக கூறினார். அப்போது மது மற்றும் இறைச்சி விற்பனைக்கு உத்தரபிரதேச அரசு தடை விதித்துள்ளதாக அறிவித்தார்.

அதை தொடர்ந்து மது, இறைச்சி விற்பனைக்கு தடை செய்வதற்கான திட்டங்களை தயாரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று தெரிவித்தார். மேலும் மது மற்றும் இறைச்சி வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் பால் விற்பனையை மேற்கொள்ளலாம் என்று அம்மாநில முதல்வர் தெரிவித்தார்.

இதற்கு முன்பு அந்த மாநிலத்தில் உள்ள அயோத்தி மாவட்டத்தில் இறைச்சி, மதுவும் மாவட்டம் முழுவதும் தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here