தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் வழக்கத்திற்கு மாறாக வெயிலின் தாக்கம் இருப்பதால், வீடுகள்தோறும் ஏ/சி, FAN உள்ளிட்ட மின் சாதனங்களின் பயன்பாடுகள் அதிகரித்து வருகிறது. இதனால் மின் விநியோகமும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்து வருவதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (TANGEDCO) அறிவித்துள்ளது.
அதன்படி உச்சபட்சமாக 430.13 மில்லியன் அலகுகளாக மின்சார நுகர்வு, நேற்று (ஏப்ரல் 2) பதிவாகி உள்ளதாக தெரிவித்துள்ளனர். இருந்தாலும் மின் நுகர்வோர்களுக்கு சீரான மின் விநியோகம் வழங்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இதற்கு முன்னதாக, கடந்த மார்ச் 29ஆம் தேதி 426.44 மில்லியன் அலகுகளாக மின் விநியோகம் இருந்தது குறிப்பிடத்தக்கது.
Enewz Tamil WhatsApp Channel
அப்படி போடு.., விஜயின்’ கில்லி’ திரைப்படம் ரீ-ரிலீஸ்.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!