சென்னையில் மெட்ரோ ரயில் பயனாளிகளுக்கு பல்வேறு சலுகைகளை மெட்ரோ நிர்வாகம் அறிவித்து வருகிறது. அதன் படி (டிசம்பர் 3 தேதி) நாளை மெட்ரோ ரயில் நிறுவன தினத்தை முன்னிட்டு க்யூ ஆர் குறியீடு பயணச்சீட்டு முறையில் 5 ரூபாய்க்கு பயணம் செய்யலாம் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்திருந்தனர். தற்போது இதை தொடர்ந்து மற்றொரு அறிவிப்பும் வெளியாகியுள்ளது.
அதாவது நாளை புயல் காரணமாக மெட்ரோவில் பயணிப்போரின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது. இதன் காரணமாக வரும் டிசம்பர் 17 ஆம் தேதியும் யூ ஆர் குறியீடு பயணச்சீட்டு முறையில் ரூ.5 க்கு பயணிக்கலாம் என அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். இந்த சலுகை மெட்ரோ பயணிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.