வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள மிக்ஜம் புயல் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதனால் சென்னை, செங்கல்பட்டு, திருவாரூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த விடுமுறை காரணமாக அண்ணா பல்கலைக்கழக கழகத்தின் செமஸ்டர் தேர்வுகள் அனைத்தும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று நடைபெற இருந்த பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி நிறுவனத்தின் செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அதேபோல் நாளை நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் இன்ஜினியரிங் கல்லூரி செமஸ்டர் தேர்வுகளும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுகள் மீண்டும் எப்போது நடைபெறும் என பின்னர் அறிவிக்கப்படும் என்று கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தவிர அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும், அரசு உதவி பெறும் கல்லூரிகளிலும் நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்படுவதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.