இந்த நிதியாண்டுக்கான காகிதமில்லா பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று (01-02-2022) தாக்கல் செய்ததை அடுத்து, பல்வேறு திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
பட்ஜெட் தாக்கல்:
இந்திய நாடாளுமன்றத்தின் மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று துவங்கியது. 2022-23ம் நிதியாண்டுக்கான மத்திய காகிதமில்லா பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 4வது முறையாக இன்று தாக்கல் செய்தார். இரண்டாவது முறையாக தாக்கல் செய்யபட்ட இந்த டிஜிட்டல் பட்ஜெட்டில், பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் அறிவிக்கப்பட்டது. இதன்படி, இந்தியா முழுவதும் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் விதமாக, 14 துறைகளில் 5 ஆண்டுகளில் 60 லட்சம் வேலைவாய்ப்புகள் மேக் இன் இந்தியா என்ற திட்டத்தின் வாயிலாக அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக அறிவித்தார்.
இதுபோக, வந்தே பாரத் திட்டம் மூலம் 400 புதிய ரயில் சேவைகள் இயக்கப்படும் என்றும், 25,000 கி.மீ. தொலைவுக்கு புதிய தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் உறுதியளித்தார். அடுத்த 25 ஆண்டுகளில், இந்தியா எப்படி இயங்க போகிறது என்பதை கணித்து இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்