கொரோனா பேரிடர் எதிரொலி – நாமக்கல் மருத்துவமனையில் படுக்கை வசதி இல்லாமல் தவிக்கும் நோயாளிகள்!!

0

நாடு முழுவதும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட எண்ணிக்கையும் அதனால் ஏற்படும் இறப்பு விகிதமும் அதிகமாக உள்ள நிலையில் தற்போது நாமக்கல் மருத்துவமனையிலும் படுக்கை வசதி இல்லமால் நோயாளிகள் தவிக்கின்றனர்.

ருத்ரதாண்டவம் ஆடும் கொரோனா:

நாடு முழுவதும் முதல் அலையை தொடர்ந்து இரண்டாம் அலையில் கொரோனா தீவிரமாக பரவி வரும் நிலையில் நாடு முழுதும் மக்கள் கடுமையான அச்சத்தில் உள்ளனர். இதனால் மக்கள் பலரும் தங்களை தனிமைப்படுத்தி வருகின்றனர். 1000கும் மேற்பட்டோர் கொரோனாவால் உயிரிழந்துள்ள நிலையில் மத்திய மற்றும் மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்க்கை 20,000 ஐ தாண்டிய நிலையில் மக்கள் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 1,625 படுக்கைகள் உள்ள நிலையில் பெரும்பாலான படுக்கைகள் நிரம்பின. இதனால் மருத்துவமனைகளில் கூடுதல் படுக்கை வசதியை ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தமிழகத்தில் தற்போது கோவை, மதுரையை தொடர்ந்து தற்போது நமக்கல்லிலும் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. ஒத்துழைப்பு இல்லாமல் கொரோனா பேரிடரை நம்மால் கடக்கமுடியாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here