கடுமையான ஊரடங்கால் கொரோனாவில் இருந்து மீண்ட நாடு – பெருமிதத்தில் பிரதமர்!!

0

சுமார் 10 மாதங்களுக்கு பிறகு இங்கிலாந்தில் தற்போது 24 மணி நேர நிலவரப்படி ஒருவருக்கு கூட கொரோனா தொற்று ஏற்படவில்லை. இதற்கு காரணம் அங்கு மேற்கொள்ளப்பட்ட கடுமையான நடவடிக்கை தான் என்று நாட்டின் பிரதமர் பெருமிதம் கொள்கிறார்.

கொரோனா தொற்று:

கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் உருமாறிய கொரோனா நோய்த்தொற்று இங்கிலாந்து நாட்டில் பரவி மக்களை மிக அதிக அளவில் பாதித்து வந்தது. அங்கு இயல்புக்கு மாறாக அதிக பேர் கொரோனா பாதிப்பு உள்ளாகி வந்தனர். இதன் காரணமாக அங்கு கடந்த டிசம்பர் மாதம் முதல் கடுமையான ஊரடங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும் கிறிஸ்துமஸ் மற்றும் புது வருட பிறப்பு கொண்டாட்டத்திற்கும் தடை விதிக்கப்பட்டது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனை தொடர்ந்து அங்கு தடுப்பூசி வழங்கும் பணிகள் விரைவு படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது அந்த நாடு கொரோனாவில் இருந்து முழுமையாக மீளும் நிலை ஏற்பட்டுள்ளது. அதன்படி கடந்த ஜூலை மாதத்திற்கு பின்பு தற்போது மீண்டும் கடந்த திங்கள் கிழமை(மே 10) அன்று ஒருவருக்கு கூட கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்படவில்லை.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

ரெம்டெசிவர் மருந்தினை வாங்க சென்னையில் அலைமோதும் மக்கள் – கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்பு!!

மேலும் பிரிட்டன் நாட்டின் இதர பகுதிகளான இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வடக்கு அயர்லாந்து ஆகிய நாடுகளில் உயிரிழப்பவர்களில் ஒருவருக்கு கூட கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்படவில்லை. இதற்கு பொதுமக்களின் முயற்சி மற்றும் தடுப்பூசி திட்டம், ஊரடங்கு நடவடிக்கை தான் என்று இங்கிலாந்தின் தலைமை மருத்துவ அதிகாரி பேராசிரியர் கிறிஸ் விட்டி தெரிவித்தார். தற்போது கொரோனாவை ஊரடங்கு மூலம் வென்று காட்டிய நாட்டின் பிரதமருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here