கொரோனாவிற்கு எதிரான மிக முக்கிய மருந்தாக காணப்படும் ரெம்டெசிவர் மருந்தினை வாங்குவதற்கு தற்போது சென்னை மருத்துவமனைகளில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
ரெம்டெசிவர்:
சென்னையில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் குவியும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அங்கு தற்போது மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லாத காரணத்தினால் நோயாளிகள் அனைவரும் மருத்துவமனைக்கு வெளியே நீண்ட காத்திருக்கும் வேதனைக்குரிய நிலை ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா நோயாளிகளுக்கு உதவிகரமாக இருப்பது ரெம்டெசிவர் மருந்து.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!
தற்போது அந்த மருந்தினை வாங்குவதற்கு மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் அனைத்து மாவட்டத்தில் இருந்தும் சென்னைக்கு பொதுமக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. இதனை தடுக்கும் வகையில் நெல்லை, மதுரை, கோவை, திருச்சி மற்றும் சேலம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் ரெம்டெசிவர் மருந்து விநியோகிக்கப்பட்டு வருகிறது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பயிற்சியாளருக்கு மீண்டும் கொரோனா – தொடரும் சோகம்!!
இந்நிலையிலும் தற்போது சென்னையில் வழக்கம் போல் ரெம்டெசிவர் மருந்தினை வாங்க வரும் மக்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் தற்போது சென்னையில் மேலும் கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே இதற்கு தமிழக அரசு விரைவில் தீர்வு காண வேண்டும் என்று அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர்.