சென்னையில் உள்ள சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்றது. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
முன்னதாக இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனி 24 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள் உட்பட 224(265) இரட்டை சதம் விளாசினார். இதன் விளைவாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களில் இரட்டை சதம் அடித்த ஒரு இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். தற்போது இவர் சாதனை படைத்த இத்தினத்தை ரசிகர்கள் நினைவு கூர்ந்து மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.