நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாக உள்ளது. இதனால் அனைத்து கட்சிகளும் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக அனைத்து கட்சிகளும் பல வாக்குறுதிகளையும் அறிவித்து வருகின்றனர். இப்படி இருக்கும் சூழலில் இப்போது மத்திய உள்துறை அமைச்சகம் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
அதாவது மக்களவைத் தேர்தலை முன்னிட்டு அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்த வேண்டும் என போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அனைத்து இடங்களிலும் மோப்ப நாய்கள் உதவியுடன் கண்காணிக்க வேண்டும் எனவும் இந்த தேர்தலின் போது எந்த ஒரு அசம்பாவிதமும் ஏற்படக்கூடாது எனவும் தெரிவித்துள்ளனர்.