சினிமா துறையில் தற்போது பல எண்ணற்ற கலைஞர்களை நாம் இழந்து வரும் நிலையில் முக்கிய இயக்குனர் ஒருவரின் சகோதரர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார். இதனால் பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
குரு ராஜேந்திரன்
கொரோனாவால் தொடர்ந்து பல மக்கள் உயிரிழந்து வருகின்றனர். முதல் அலையை விட இந்த இரண்டாவது அலை மக்களை அதிகமாக பாதித்து வருகிறது. இந்த ஏப்ரல் மாதத்தில் இருந்தே இந்த நோய் பலரையும் தாக்கி வருகிறது. ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருத்துவமனையில் படுக்கை வசதியின்மை, சடலங்களை எரிக்க கூட இடப்பற்றாக்குறை என பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறோம்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மூச்சு திணறலால் தான் பலியாகின்றனர். மேலும் இந்த கொரோனா ஆரம்பித்த நாளில் இருந்து பல முக்கிய பிரபலங்களையும் இலாந்து வருகிறோம். எஸ்.பி.பி, பாண்டு போன்ற கலைஞர்களை இந்த கொரோனா பறித்துக்கொண்டுள்ளது என்றே சொல்லலாம்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இப்படி இருக்க தற்போது திரையுலகிற்கு மீண்டும் ஒரு சோகம் நிகழ்ந்துள்ளது. தமிழ் திரையுலகில் வெற்றிநடை போட்ட குக்கூ, ஜோக்கர், ஜிப்ஸி போன்ற படங்களை இயக்கியவர் தான் ராஜு முருகன். தற்போது 44 வயதான இவரது தம்பி குரு ராஜேந்திரன் கொரோனாவால் உயிரிழந்துள்ளார். இது பலரையும் சோகமாக்கியுள்ளது. இதனால் திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.