பழைய ஓய்வூதிய திட்டம்: முதல்வருக்கு கருப்புக்கொடி ஏற்றி வரவேற்பு., பரபரப்பான அறிவிப்பை வெளியிட்ட பஞ்சாப் அரசு ஊழியர் சங்கங்கள்!!!

0
பழைய ஓய்வூதிய திட்டம்: முதல்வருக்கு கருப்புக்கொடி ஏற்றி வரவேற்பு., பரபரப்பான அறிவிப்பை வெளியிட்ட பஞ்சாப் அரசு ஊழியர் சங்கங்கள்!!!

நாடு முழுவதும் அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை (OPS) அமல்படுத்த வேண்டும் என நீண்ட காலமாக போராடி வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ளிட்ட சில மாநில அரசுகள் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தி உள்ளது. அதன்படி பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால் அரசு ஊழியர்களுக்கு OPS அமலுக்கு கொண்டு வரப்படும் என உறுதி அளித்து இருந்தனர்.

ஆனால் ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டுகள் ஆகியும் எவ்வித நடவடிக்கையும் மாநில அரசு எடுக்கவில்லை. இது தொடர்பான பேச்சுவார்த்தை கூட்டத்தையும் புறக்கணிக்கப்பட்டதால், சங்கர்ஷ் கமிட்டி தலைவர் ஜதின் சர்மா கடும் அதிருப்தி தெரிவித்து உள்ளார். அதாவது முதல்வர் பகவந்த் மான் மாநிலத்தில் எங்கு சென்றாலும் கருப்புக்கொடி ஏற்றி வரவேற்பு அளிக்கப்படும். இனியும் கால தாமதப்படுத்தினால் தீவிர போராட்டம் மேற்கொள்ளப்படும்.” என அறிவித்துள்ளார்.

Enewz Tamil WhatsApp Channel 

அடடே இப்படியும்  பண்ணலாமா?? ஹோட்டலில் இதுக்கு கம்பளைண்ட் பண்ணா 15,000.., ஷாக் நியூஸ்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here