விமானங்கள் தரை இறங்குவதில் ஏற்பட்ட சிக்கல்., மீண்டும் சென்னை விமான சேவை பாதிப்பு!!

0
விமானங்கள் தரை இறங்குவதில் ஏற்பட்ட சிக்கல்., மீண்டும் சென்னை விமான சேவை பாதிப்பு!!
வங்க கடலில் உருவாகிய மிக்ஜாம் புயலின் தாக்கத்தால் சென்னை பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையின் பெரும் பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. மேலும் மக்கள் தங்கள் இயல்பு நிலைக்கு திரும்ப மிகவும் சிரமத்தில் தவித்து வருகின்றனர். இதோடு போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து நேற்று சென்னை விமான நிலையத்தின் சேவை மீண்டும் தொடங்கப்பட்டது. ஆனால் சென்னையில் கடும் பனிமூட்டம் காணப்படுவதால் விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானத்தில் வட்டமடித்து வருகின்றனர். இதனால் சென்னை விமான நிலையத்தின் சேவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னை வரும் விமானங்களை திருச்சி மற்றும் பெங்களூரு விமான நிலையங்களுக்கு திருப்பிவிட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here