அரசு ஊழியர்களுக்கு வழங்கிய புதிய பென்ஷன் திட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நீடித்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு இமாச்சல் உள்ளிட்ட சில மாநிலங்களில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தி வருகின்றனர். இதுபோன்று ரிசர்வ் வங்கி எச்சரிக்கையை மீறும் மாநிலங்களுக்கு கூடுதல் நிதிச் சுமை ஏற்படும் என மத்திய நிதியமைச்சகம் எச்சரித்திருந்தது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதுகுறித்து இமாச்சல மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் கூறுகையில், “சட்டசபை தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவே பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது. இதனால் நிதி நெருக்கடி ஏற்பட வாய்ப்பு இருந்தாலும் துணிந்து தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.” என கூறியிருந்தார்.
அஞ்சல் தேர்வு 2023 : தமிழக விண்ணப்பதாரர்களுக்கு குட் நியூஸ்., நிர்வாக இயக்குனர் உத்தரவு!!
இதனால் தான் தேர்தல் வாக்குறுதிகளாக தமிழ்நாடு அரசு அறிவித்த ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த அரசு தயங்கி வருகிறது. இதுகுறித்து சென்னையில் மாநாடு நடத்த இருப்பதாக அரசு ஊழியர்கள் தெரிவித்து வருகின்றனர்.