தமிழகத்தில் முதியோர் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ரூ.1,000 ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஓய்வூதியம் ரூ.1,000 லிருந்து ரூ.1,200 ஆக உயர்த்த உள்ளதாக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அண்மையில் அறிவித்து இருந்தார். இதற்கேற்றாற்போல் முதியோர், கைம்பெண், ஆதரவற்றவர்களுக்கான மாத ஓய்வூதியம் உயர்த்தப்பட்டதாக தமிழ்நாடு அரசு அரசாணையை வெளியிட்டது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்த உயர்த்தப்பட்ட ஓய்வூதியம் ஆகஸ்ட் மாதம் முதல் அமலுக்கு வர இருப்பதாகவும் குறிப்பிட்டு இருந்தனர். இந்நிலையில் இதற்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை செயலாளர் அறிவித்துள்ளார். இதனால் ஆகஸ்ட் மாதம் முதல் ஓய்வூதியம் உயர்த்தப்படுமா? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஒரு லட்சம் நாய்களுக்கு தடுப்பூசி போட BMC ஒப்பந்தம்.., வெளியான முக்கிய தகவல்!!