மாநிலத்தில் மெல்ல அதிகரிக்கும் கொரோனா தொற்று – வருகிற பிப்.28 வரை மீண்டும் இரவு நேர ஊரடங்கு அறிவிப்பு!!

0

கடந்த சில தினங்களாக ஒடிசா மாநிலத்தில் குறைந்து வந்த வைரஸ் பாதிப்பு, தற்போது மீண்டும் அதிகரித்து வருவதால், வருகிற பிப்ரவரி 28ம் தேதி வரை மீண்டும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் ஊரடங்கு:

ஒடிசா மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு குறைவாக பதிவாகி வந்த நிலையில் தற்போது மீண்டும் மெல்ல அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஒடிசாவில் கடந்த திங்கட்கிழமை தளர்த்தப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள், மீண்டும் வருகிற பிப்ரவரி 28ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து, மாநிலத்தில் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என்றும், தியேட்டர்கள், வணிக வளாகங்கள் மற்றும் சந்தைகள் உள்ளிட்ட மக்கள் கூடும் பொது இடங்கள் காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும், 3,329 நபர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து முக்கிய கட்டுப்பாடுகளை அறிவித்த பின், பேசிய மாநில பொது சுகாதார இயக்குனர் நிரஞ்சன் மிஸ்ரா, மாநிலத்தில் பள்ளிகளை திறக்கும் எண்ணம் இப்போதைக்கு இல்லை என தெரிவித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here