தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இப்போது மக்களவைத் தேர்தல் நெருக்கும் நிலையில் உள்ளதால் அமமுகவுடன் உடன் இணைந்து பணியாற்றுவதாக சமீபத்தில் கூறியிருந்தார். இந்நிலையில் நேற்று நெல்லை மாவட்டத்தில் நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள இருந்தார். அப்போது ஆலோசனை கூட்டத்திற்கு செல்லும் போது திடீரென அவருக்கு தலைசுற்றல் ஏற்பட்டது.
இதனால் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் ஹோட்டல் அறையில் ஓய்வு எடுத்தார். அதன் பின் அவரை டாக்டர்கள் பரிசோதித்து விட்டு தீவிர சிகிச்சை அளித்தனர். பின் பன்னீர்செல்வத்தை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இப்போது அவர் முழு ஓய்வு எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.