நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 உலக கோப்பையின் அரையிறுதிப் போட்டியில் முகமது ரிஸ்வான் மற்றும் பாபர் அசாம் ஆகியோரின் அதிரடியால், பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
டி20 உலக கோப்பை 2022:
நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 உலக கோப்பை அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் அணி போட்டியிட்டது. இந்த போட்டியில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து, களமிறங்கிய நியூசிலாந்தின் தொடக்க வீரர்களில், ஃபின் ஆலன் 4 ரன்களில் வெளியேற, டெவோன் கான்வே மற்றும் கேன் வில்லியம்சன் அதிரடி காட்ட தொடங்கினர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
ஒரு கட்டத்தில், டெவோன் கான்வே (21), கேன் வில்லியம்சன் (46) என பெவிலியன் திரும்ப டேரில் மிட்செல் 35 பந்துகளில் அரைசதம் கடந்து (53*) அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதன் மூலம், நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்களை எடுத்திருந்தது. இதில், பாகிஸ்தான் சார்பாக ஷஹீன் அப்ரிடி (2) மற்றும் முகமது நவாஸ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்திருந்தனர்.
தோனி இல்லாமல் செமி பைனலில் களமிறங்க இருக்கும் இந்தியா…, T20 WC சாம்பியன் பட்டத்தை வெல்லுமா??
153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணியில், முகமது ரிஸ்வான்(57) மற்றும் பாபர் அசாம்(53) அதிரடியாக விளையாடி முதல் விக்கெட்டுக்கு 105 ரன்கள் குவித்து வெளியேறினர். இவர்களை தொடர்ந்து, முகமது ஹாரிஸும் 30 ரன்கள் எடுத்து அசத்த பாகிஸ்தான் அணி 19.1 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றதுடன் இறுதிப் போட்டிக்கும் முன்னேறியது.