2021 ஆம் ஆண்டுக்கான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் நோவக் ஜோகோவிச், ஸ்டெபானோஸ் சிட்சிபாஸை வீழ்த்தி கோப்பையை தட்டி சென்றார்.
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகின்றன. இதில் ஆண்கள் ஒற்றையர் இறுதி போட்டியில் செர்பிய வீரரான நோவக் ஜோகோவிச் மற்றும் கிரீஸ் நாட்டின் ஸ்டெபானோஸ் சிட்சிபாஸ் இடையே நடைபெற்ற ஆட்டத்தில் தலா இரண்டு செட்டுகளை சிட்சிபாஸ் கைப்பற்றியதால் அவர் வெற்றி பெறுவார் என கணிக்கப்பட்டது.
விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில், அடுத்த 3 செட்டுகளையும் ஜோகோவிச் கைப்பற்றி வெற்றியை தன் பக்கம் திருப்பினார். கிட்டத்தட்ட 4 மணி நேரத்துக்கும் மேல் நீடித்த இந்த ஆட்டத்தில் 6-7, 2-6, 6-3, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் சிட்ஸிபாஸை வீழ்த்தி பட்டம் வென்றார் செர்பிய வீரர்நோவக் ஜோகோவிச்.
இவருக்கு முன்பு ரோஜர் பெடரர், ரஃபேல் நடால் தலா 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று முதலிடத்தில் உள்ளனர். இது ஜோகோவிச் வெல்லும் 19ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்