நாம் இருவர் நமக்கிருவர் சீரியலில் ஐஸ்வர்யாவை தலையில் அடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து இன்றைக்கு வீட்டில் அழைத்து வருகிறார். இதனால் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது.
நாம் இருவர் நமக்கிருவர்
முத்தரசு நகையை திருடியதை அடுத்து அதனை எப்படியாவது வீட்டில் சொல்ல வேண்டும் என்று முடிவெடுக்கிறார். மேலும் முத்தரசை மிரட்ட வேறு வழியில்லாமல் தலையில் கட்டையை வைத்து அடிக்கிறார். இதனால் மயங்கி விழும் ஐஸ்வர்யாவை முத்தரசும் அவரது அம்மாவும் மருத்துவமனையில் சென்று அனுமதிக்கின்றனர்.
ஆரம்பத்தில் முத்தரசு அவரை கொன்று விடலாம் என்று தான் சொல்கிறார். ஆனால் அவரின் அம்மா கண்டபடி திட்டி விட மருத்துவமனையில் யாருக்கும் தெரியாமல் அனுமதிக்கின்றனர். வீட்டில் ஐஸ்வர்யா எங்கே என்று அனைவரும் தேட அவர்கள் கோவிலுக்கு சென்றுள்ளதாக முத்தரசு அம்மா பொய் சொல்கிறார்.
இதனால் கோவமடையும் மாயன் ஐஸ்வரியாவை கண்டுபிடிப்பதில் மும்முரமாக இருக்கிறார். மகா அப்பொழுது எதிர்பாராத விதமாக முத்தரசையும் ஐஸ்வர்யாவையும் மருத்துவமனையில் பார்க்கிறார்.
இதனை மாயனிடம் வந்து சொல்ல அதற்குள் முத்தரசி ஐஸ்வர்யாவை அழைத்து சென்று விடுகிறார். வீட்டில் வந்து மாயன் அனைவரையும் கண்டபடி மிரட்டுகிறார். என் தங்கச்சி எனக்கு இப்போவே வந்தாகணும் என்று சொல்கிறார். அப்பொழுது ஐஸ்வர்யாவை முத்தரசு அழைத்து வருகிறார்.
ஐஸ்வர்யாவை பார்த்து அனைவரும் கலங்க என்ன ஆனது என்று முத்தரசை அடிக்கிறார் மாயன். அதனை ஐஸ்வர்யா தடுத்து தான் குளத்தில் கால் கழுவும் போது கீழே விழுந்ததாக சொல்கிறார். ஆனால் மாயனுக்கு இது எதுவும் நம்புவது போல இல்லை. காயத்ரி சென்று ஐஸ்வர்யாவுடன் அழுது புலம்புகிறார். உனக்கு இப்படி ஒரு நிலைமை ஆகும்னு தெரிஞ்சு இருந்தால் கண்டிப்பா நான் முத்தரசை கல்யாணம் பணி இருப்பேன் என்றும் அழுகிறார்.
இதனால் கண்ணீர் விடும் ஐஸ்வர்யா ஹாஸ்பிடலில் நடந்ததை பற்றி நினைத்து பார்க்கிறார். ஏனெனில் முத்தரசு ஐஸ்வர்யா குளிக்கும் போது தெரியாமல் வீடியோ எடுத்து தற்போது அதனை வைத்து மிரட்டி கொண்டுள்ளார். ஐஸ்வர்யா இதனால் கண்டிப்பாக பெரிய பிரச்சனை வரும் என்று நினைத்து கொண்டு அமைதியாக உள்ளார். இதோடு எபிசோடும் முடிவடைகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்