தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நிகழும் முக்கிய பண்டிகைகள், திருவிழாக்கள், தலைவர்கள் தினம் போன்றவற்றின் போது அந்தந்த மாவட்டத்திற்கு பொது விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். மேலும் இந்த பொது விடுமுறை பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டுமல்லாமல் அரசு அலுவலகங்களுக்கு வழங்கப்படும். ஆனால் இப்போது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதாவது தூத்துக்குடி மாவட்டத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு அரசு விடுமுறை நாட்கள் பொருந்தாது. அதாவது அரசு விடுமுறை நாட்களில் வழக்கம் போல் அலுவலகங்கள் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி கூறியுள்ளார். இதற்கான காரணம் என்னவென்றால் மழை பாதித்த பகுதிகளில் நிவாரண பணிகள் நடைபெற்று வருவதால் அரசு ஊழியர்களுக்கு தற்போதைக்கு அரசு விடுமுறை கிடையாது என தெரிவித்துள்ளார்.