பீகாரில் தடம்புரண்டு விபத்துக்குள்ளான “வடகிழக்கு எக்ஸ்பிரஸ் ரயில்”., கதிகலங்க வைக்கும் உயிரிழப்பு!!!

0
பீகாரில் தடம்புரண்டு விபத்துக்குள்ளான
பீகாரில் தடம்புரண்டு விபத்துக்குள்ளான "வடகிழக்கு எக்ஸ்பிரஸ் ரயில்"., கதிகலங்க வைக்கும் உயிரிழப்பு!!!

டெல்லி ஆனந்த் விஹாரிலிருந்து அசாம் காமாக்யா நோக்கி சென்ற வடகிழக்கு எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று (அக்டோபர் 11) இரவு 09.35 மணியளவில் பீகார் மாநிலம் பக்ஸார் அருகே வரும் போது, தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. சம்பவம் அறிந்து விரைந்து வந்த மீட்பு குழுவினருக்கு அப்பகுதி மக்கள் செல்போன் டார்ச் மூலம் உதவி செய்தனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

ஆறு பெட்டிகள் தடம்புரண்டதால் 60க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததாகவும், 4 பேர் உயிரிழந்ததாகவும் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களுக்கு மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உள்ளிட்ட பலரும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். விபத்து காரணமாக இவ்வழித்தடங்களில் வரவிருந்த 2 ரயில்கள் ரத்து செய்யப்பட்டதுடன் 21 ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்படுவதாகவும் கூறியுள்ளனர்.

தமிழகத்துக்கு வினாடிக்கு 3000 கன அடி காவிரி நீர் திறப்பு., இந்த தேதி வரை? கர்நாடக அரசுக்கு உத்தரவு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here