நித்தியானந்தாவை கைது செய்ய முடியாமல் போலீசார் வழி தேடி வரும் நிலையில், முதற்கட்டமாக பிடதி ஆசிரமம் வழியாக அவருக்கு பிடிவாரண்டு உத்தரவு அனுப்பப்பட்டுள்ளது.
கைது வாரண்ட்:
கர்நாடக மாநிலம், ராம்நகர் மாவட்டத்தில் உள்ள பிடதியில் சாமியாராக இருந்து வந்த நித்தியானந்தா சொந்தமாக ஆசிரமம் ஒன்றை நடத்தி வந்தார். அந்த ஆசிரமத்தில் வைத்து தனது பெண் சிஷ்யை ஒருவருக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக அவர் மீது புகார் செய்யப்பட்டது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இது தொடர்பான புகாரில், நித்தியானந்தா நேரில் ஆஜராக கோர்ட் பலமுறை உத்தரவிட்டும் அவர் அதைப் மதிக்கவில்லை. தன் மீதான வழக்குகளுக்கு பயந்து அவர் நாட்டை விட்டு வெளியேறினார். தற்போது கைலாசா என்ற தனித்தீவில் வசித்து வரும் அவர் அங்கிருந்தபடி, அறிக்கை வெளியிட்டு வருகிறார்.
இவரை கைது செய்ய முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். அந்த வகையில் நித்தியானந்தாவை கைது செய்யும் முதற்கட்டமாக, பிடதி ஆசிரமத்தின் வழியாக இவருக்கு பிடிவாரண்டு அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் நித்தியை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர் படுத்த போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.