இந்தியாவின் தென்மேற்கு அரபிக்கடலில் இன்னும் 24 மணிநேரத்தில் ‘நிசார்கா புயல்’ உருவாக உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
நிசார்கா புயல்:
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கிடையில் அம்பன் புயல் ஏற்படுத்திய தாக்கத்தால் மேற்கு வங்கம் உள்ளிட்ட பகுதிகள் மிகுந்த சேதமடைந்தது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் சரி ஆவதற்குள் பாகிஸ்தானில் இருந்து வந்த வெட்டுக்கிளிகள் வட மாநிலத்தின் பயிர்களை தாக்கி மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் இன்று முதல் கேரளாவில் தென்மேற்குப் பருவமழை தொடங்கி உள்ளது.
தற்போது தென்மேற்கு அரபிக்கடலில் 24 மணி நேரத்தில் நிசார்கா புயல் உருவாகும் என இந்திய வானிலை மையம் என எச்சரித்து உள்ளது. மேலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |