உயர்வுடன் தொடங்கிய சென்செக்ஸ் புள்ளிகள் – இன்றைய பங்குச்சந்தை நிலவரம்!!

0

நாட்டில் தற்போது கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக நாட்டின் பொருளாதாரம் மீண்டும் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது சென்செக்ஸ் புள்ளிகளின் இன்றைய நிலவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

சென்செக்ஸ் புள்ளிகள்:

இந்தியாவில் சுமார் ஒரு ஆண்டு காலமாக கொரோனா வைரஸ் தொற்று மிக கடுமையாக பாதித்து வருகிறது. இதன் காரணமாக கடந்த ஆண்டு பொதுமுடக்கம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பொதுமுடக்கம் காரணமாக நாட்டில் அனைத்து வகையான பொருளாதாரமும் மிக கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் நாட்டின் பொருளாதாரம் கேள்விக்குறியானது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதன் எதிரொலியாக சென்செக்ஸ் புள்ளிகள் கடுமையான சரிவை கண்டது. அதன்பின்பு நாட்டில் பல தளர்வுகளுடன் அனைத்து வகையான தொழில்களும் நடைபெற்று வந்தது. இதனால் நாட்டின் பொருளாதாரம் சரிவில் இருந்து மீள தொடங்கியது. இந்நிலையில் தற்போது இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை மிக கடுமையாக கண்டறியப்பட்டு வருகிறது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை – இன்றைய நிலவரம்!!

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

இதன் காரணமாக தமிழகத்தில் மீண்டும் பொதுமுடக்கம் விதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது இன்றைய நிலவரப்படி சென்செக்ஸ் வர்த்தகம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி சென்செக்ஸ் புள்ளிகள் 102.06 புள்ளிகள் உயர்ந்து 48,779.61 புள்ளிகளுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. அதேபோல் நிஃப்டி புள்ளிகள் 42.65 புள்ளிகள் உயர்ந்து 14,660.50 புள்ளிகளுடன் வர்த்தகம் தொடங்கியுள்ள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here