ஏகப்பட்ட திரைப்பட வாய்ப்புகள் இருந்தாலும் கூட ரசிகர்களுடன் நேரத்தை செலவிட்டு வரும் நிதி அகர்வால் தற்போது ஒரு cute ஆன புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். அந்த புகைப்படம் ஒவ்வொன்றையும் பார்த்து ரசிகர்கள் வர்ணித்து கொண்டிருக்கின்றனர்.
நிதி அகர்வால் ரீசென்ட் போஸ்ட்
தற்போதெல்லாம் சினிமாத்துறையில் ஓரிரு திரைப்படங்கள் நடித்துவிட்டு ரசிகர்களின் மனதில் நல்ல ஒரு தடத்தை பதித்து விடுகின்றனர். அந்த வகையில் பூமி திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் தான் நிதி அகர்வால். தனது முதல் திரைப்படமே இவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.
இதனை தொடர்ந்து சிம்புவுடன் இணைந்து ஈஸ்வரன் திரைப்படத்தில் நடித்தார். ஈஸ்வரன் திரைப்படமும் எதிர்பார்த்ததை விட நல்ல வரவேற்பு கொடுத்தது.தற்போது பெரும்பாலும் நிதி அகர்வால் திரைப்படங்களைக் காட்டிலும் மாடலிங் துறையில் தான் அதிகமான கவனம் செலுத்தி வருகிறார்.
ஆனாலு,ம் திரைப்பட வாய்ப்புகளை தவற விடாமல் கைப்பற்றி வைத்திருக்கிறார். மேலும், திரைப்படம், மாடலிங் என பிஸியாக இருந்தாலும் கூட அவ்வப்போது ரசிகர்களுக்காக தனது நேரத்தை ஒதுக்கி வருகிறார். தற்போது மெழுகு சிலை போல ஜொலிக்கும் படியான ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். தற்போது அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.