தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.., வானிலை மையம் அறிவிப்பு!!!

0
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு..
கேரள கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு லேசானது முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் தமிழகத்தின் தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடனும் நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது. மேலும் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக் கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் பலத்த சூறைக்காற்று வீசக்கூடும். இதனால் மீனவர்கள் இன்று முதல் வரும் 12ஆம் தேதி வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here