தமிழ்நாடு அரசின் இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான TNPSC “குரூப் 4” போட்டித் தேர்வுக்கான அறிவிப்பு கடந்த ஜனவரி 30-ம் தேதி வெளியிட்டது. அதன்படி நேற்று (ஜூன் 9) தமிழ்நாடு முழுவதும் 7,247 மையங்களில் குரூப் 4 எழுத்து தேர்வு நடைபெற்றது. இத்தேர்வில் இன்வேலிட் மதிப்பெண் என்ற முறையும் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. அதாவது ஒரே கேள்விக்கு தவறான பதிலை முதலில் தேர்வு செய்து அதை அடித்து விட்டு பிறகு வேறு பதிலை குறித்தால் அந்த கேள்விக்கான மதிப்பெண் இன்வேலிட் ஆகிவிடும். இந்த புதிய முறை தேர்வர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.