தமிழக ரேஷன் அட்டைதாரர்களே.. இனி இதுவும் கண்காணிக்கப்படும்.., வெளியான அறிவிப்பு!!!

0
தமிழக ரேஷன் அட்டைதாரர்களே.. இனி இதுவும் கண்காணிக்கப்படும்.., வெளியான அறிவிப்பு!!!
தமிழக அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு மலிவு விலையில் உணவுப் பொருட்கள் வழங்கி வருகின்றனர். சமீபத்தில் கூட பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பரிசு தொகுப்புடன் ரூ.1000 பணமும் வழங்கியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் முன்னாள் முதல்வர் OPS முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்குகளில் இருந்து நியாய விலை கடைகளுக்கு அரிசி, கோதுமை, சர்க்கரை, பருப்பு போன்றவை 50 கிலோ எடை கொண்ட மூட்டைகளாக அனுப்பப்படுகிறது.
ஆனால் சமீபத்தில் இந்த ஒவ்வொரு மூட்டையிலும் 4 முதல் 5 கிலோ வரை எடை குறைவாக இருப்பதாக புகார்கள் வந்துள்ளது. இப்படி 4, 5 கிலோ குறைவான மூட்டைகளை ரேஷன் கடைகளில் கொடுக்கும் போது பொதுமக்களுக்கு வழங்கப்படும் பொருட்களின் எடை குறைக்கப்படுகிறது. இதனால் இனி வரும் நாட்களில் இதுபோன்ற எந்தவித தவறுகளும் நடக்காமல் இருப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். மேலும் பொது மக்களுக்கு அனைத்து பொருட்களும் சரியான எடையில், தரமாக வழங்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும் என அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here