“நாம் தமிழர்” அங்கீகரிக்கப்படாத கட்சி., நிலையான சின்னம் எப்படி? சீமானுக்கு அதிர்ச்சி தந்த ஐகோர்ட்!!!

0

நாடாளுமன்ற தேர்தல் கூடிய விரைவில் வர இருப்பதால், அரசியல் கட்சிகளுக்கான சின்னங்களை தேர்தல் ஆணையம் ஒதுக்கி வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு, வழக்கமான விவசாயி சின்னம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த சின்னத்தை ஆந்திராவில் உள்ள வேறொரு கட்சிக்கு ஒதுக்கி விட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சீமான் டெல்லி உயர்நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவை பரிசீலித்த நீதிபதிகள், “குறிப்பிட்ட வாக்கு சதவீதத்துடன் உள்ள கட்சிக்கு மட்டுமே நிரந்தர சின்னம் வழங்கப்படும். ‘நாம் தமிழர்’ என்ற அங்கீகரிக்கப்படாத கட்சிக்கு, குறிப்பிட்ட சின்னத்தை எப்படி? வழங்க முடியும். எனவே முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.” எனக் கருத்துக்களை தெரிவித்துள்ளார். இது நாம் தமிழர் கட்சி சீமான் உட்பட பலர் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

TN TET தேர்வர்களே.., தேர்வில் வெற்றி பெற சிறந்த வழி இதோ…, மிஸ் பண்ணிடாதீங்க!!

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here