தமிழகத்தில் காலை உணவு திட்டத்தால் வந்த புது சிக்கல்.., விளக்கம் கொடுத்த சென்னை மாநகராட்சி!!!

0
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு காலை மற்றும் மத்திய உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இப்படி இருக்கையில் சமீபத்தில் சென்னை மாநகராட்சி காலை உணவு திட்டத்தை தனியாரிடம் ஒப்படைக்க மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் தற்போது சென்னை மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது.
அதாவது ஒப்பந்த அடிப்படையில் காலை உணவை தரமாக தயாரித்து வழங்கும் சூழல் ஏற்பட்டால் தான் தனியாரிடம் வழங்குவதற்கான ஒப்புதல் சென்னை மாநகராட்சியின் மன்றத்தில் பெறப்பட்டது. அதுவரை சென்னை மாநகராட்சி சார்பிலேயே தான் காலை உணவு திட்டம் தொடர்ந்து நடத்தப்படும்” என மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here