இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்துள்ள ஐபிஎல் தொடரின் 17 வது சீசன் வரும் மார்ச் 22ம் தேதி முதல் தொடங்க உள்ளது. இந்த தொடரில் அனைத்து அணிகளின் நோக்கமும், சாம்பியன் பட்டத்தை வெல்வதாகவே இருக்கும். எதிர்வரும் இந்த ஐபிஎல் தொடரில், CSK, RCB, MI உள்ளிட்ட 10 அணிகள் பங்கு பெற உள்ளன. இதில், இதுவரை நடைபெற்றுள்ள 16 சீசன்களில், 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்றதுடன் , எதிரணிகளுக்கு அதிக நெருக்கடி கொடுக்க கூடிய அணியாக சென்னை அணி திகழ்கிறது.
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த ஒரு வார காலமாக மகேந்திர சிங் தோனி சென்னையில் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இவருடன் ருதுராஜ் மற்றும் தீபக் சாகர் ஆகியோரும் பயிற்சி ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து கடந்த முறை போலவே சென்னையில் தோனி பயிற்சி மேற்கொள்ளும் போது இம் முறையும் ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது ஒரு பக்கம் இருந்தாலும் அவர் பயிற்சி மேற்கொள்ளும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்கில் உள்ளது குறிப்பிடத்தக்கது.