மகாராஷ்டிராவில் ஆன்லைன் பாடத்தை கவனிக்காமல் இருந்ததால் 4 வயது மகனை தலையணையால் முகத்தை அமுக்கி அந்த சிறுவனின் தாய் கொலை செய்துள்ளார். மேலும் அதிர்ச்சியில் அவரும் தூக்குபோட்டு தற்கொலை செய்துள்ளார்.
கொரோனா காலம் என்பதால் இந்தியாவில் பல மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்படவில்லை. இதனால் குழந்தைகளின் படிப்பு கெட்டு விடக்கூடாது என்பதற்காக பள்ளிகள் ஆன்லைன் பாடத்தை நடத்தி வருகின்றன. இதனால் குழந்தைகளும் ஆன்லைன் வழியே தங்கள் பாடங்களை கற்று வருகின்றனர்.
இந்நிலையில் மஹாராஷ்டிராவில் உள்ள நாசிக்கில் வசித்து வந்த 32 வயது பெண் ஒருவர் தன் 4 வயது மகன் ஆன்லைன் பாடத்தை கவனிக்கவில்லை என கோவத்தில் மகனை தலையணையால் முகத்தை அமுக்கி கொலை செய்துள்ளார். மேலும் அதிர்ச்சியில் அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இந்த சம்பவம் நடக்கும் பொழுது அந்த பெண்ணின் அப்பா மற்றும் அம்மாவும் வீட்டில் இருந்ததாக கூறப்படுகிறது. தற்போது இந்த கோர சம்பவம் அந்த பகுதி மக்கள் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்