சின்ன விஷயத்துக்காக மகனை கொன்ற தாய் – அப்படி என்ன நடந்திருக்கும்???

0

குடும்ப பிரச்சனையில் தான் பெற்ற மகனுக்கு விஷம் வைத்து தாயும் தற்கொலை செய்து கொண்டார்.

மகனை கொன்று விட்டு தாயும் தற்கொலை:

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி, கரடிப்புத்தூர் கிராமத்தில் வெங்கடேசன் (25) என்பவர் தனது மனைவி நாகம்மாள் (22) உடன் வசித்து வந்தார். இவர்களிருவர்க்கும் திருமணமான நிலையில் எல்லையா (1) என்ற மகன் உள்ளார்.  வெங்கடேசன் மற்றும் அவரது மனைவிக்கு திருமணமாகி ஒன்றரை ஆண்டுகள் ஆகிய நிலையில் வெங்கடேசன் தனியாருக்கு சொந்தமான ஒரு கொய்யா தோட்டத்தில் அங்கேயே தங்கி வேலை செய்து வருகிறார்.

இப்படி இருக்க நேற்று  முன்தினம் கணவன் மற்றும் மனைவிக்கு  இடையே சண்டை வந்ததால் அதில் மன வேதனை அடைந்த நாகம்மாள்; தனது மகன் எல்லையாவிற்க்கு விஷம் வைத்து விட்டு தானும் தற்கொலை செய்துகொண்டார். விஷம் குடித்ததால் அடுத்து அடுத்து மயக்கி விழுந்த இருவரையும் அருகில் இருந்த பொதுமக்கள் மீட்டு அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

நாகம்மாளுக்கு போதிய சிகிச்சை இல்லாததால் அவர் சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். ஆனால் அங்கும் சிகிச்சை பலனளிக்காமல் தாயும், மகனும் உயிரிழந்தார்கள். திருமணமான கொஞ்ச வருஷத்தில் தனது மகள் தற்கொலை செய்ததில் சந்தேகப்பட்ட நாகம்மாளின் தாயார் போலீஸ் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பாதிரிவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெற்ற தாயே மகனை கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அனைவரையும் வருத்தமடைய செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here