தமிழகத்தில் குரங்கு அம்மை நோய் தொற்று பரவாமல் தடுப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
அதிகரிக்கும் குரங்கு அம்மை நோய்:
இந்தியாவில் கொரோனா போன்று குரங்கு அம்மை நோய் தொற்றும் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது. இந்நோய் வெளிநாடுகளான அமெரிக்கா, ஆப்பிரிக்கா நாடுகளிலும் மிக தீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இந்த நோய் தாக்கம் ஏற்படாத வகையில் அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் பற்றி சுகாதாரத்துறை அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். அதாவது, தமிழகத்தில் குரங்கு அம்மை நோயை கண்டறியப்படும் ஆய்வு கூடங்கள் கொண்டு வர வேண்டும் என மத்திய அரசிடம் முதல்வர் கோரிக்கை விடுத்து இருந்தார்.
இதற்காக சென்னையில் கிண்டி பகுதியில் உள்ள கிங் இன்ஸ்டியூட் ஆய்வகம் பயன்படுத்தப்பட உள்ளது. மேலும் இன்று நடைபெறும் 44 சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்ள வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுக்கு அவர்கள் தங்கி இருக்கும் விடுதிகளிலேயே மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தங்க ஏற்பாடு செய்யபட்டுள்ளது. போட்டியாளர்கள் சில பேருக்கு அறிகுறி தென்பட்டாலும் சோதனை முடிவில் அவர்களுக்கு தொற்று இல்லை என உறுதியாகியுள்ளது. இவ்வாறு சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்