வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும்:
விவசாயிகள் நலனுக்கு எதிரான 3 வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். விவசாயிகள் போராட்டம் 6 மாதங்களை கடந்த பின்னரும் தீர்வு ஏற்படவில்லை என்றும்; வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என ஸ்டாலின் கூறியுள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்த 3 புதிய வேளாண் சீர்திருத்த சட்டங்களை திரும்பப் பெறக் கோரி; டெல்லி எல்லைப் பகுதிகளில் கடந்த 6 மாதங்களாக விவசாயிகள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இருந்தாலும் மத்திய அரசு அவர்களின் வேண்டுகோளுக்கு எந்த பதிலும் அளிக்கவில்லை.
இந்த நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் வேளாண் சட்டங்களை திரும்ப பெற தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு அனைத்து விவசாயிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!