கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மேலும் இன்று முதல் இன்னும் 3 நாட்களுக்கு அதிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இதனால் இடுக்கி மற்றும் கண்ணூர் மாவட்டத்திற்கு ரெட் அலெர்ட்டும், மற்ற மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. இந்த கனமழையால் கேரளாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அமைச்சர் வி.சிவன் குட்டி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சினிமா டிக்கெட் கட்டணம் உயர்வு? திரையரங்கு உரிமையாளர்கள் அளித்த மனு.. ரசிகர்கள் ஷாக்!!
அதாவது மாநிலத்தில் தீவிர மழை பெய்து வருவதால் அந்தந்த ஆட்சியர் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும். ஆனால் இந்த விடுமுறையை கடைசி நேரத்தில் அறிவிக்காமல், முன்கூட்டியே அறிவித்தால் மாணவர்களும், பெற்றோர்களுக்கு சிரமப்படாமல் இருப்பார்கள் என தெரிவித்துள்ளார்.