தற்போதைய காலகட்டத்தில் சினிமா என்பது மக்களின் பொழுதுபோக்கில் ஒன்றாக விளங்கி வருகிறது. திரையரங்கிற்கு சென்று படம் பார்ப்பதை ரசிகர்கள் வாடிக்கையாக வைத்து வருகின்றனர். தற்போது தியேட்டரில் அதிகபட்சமாக டிக்கெட் விலை ரூ 190 இருந்து வருகிறது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இந்நிலையில் சினிமா டிக்கெட் விலையை உயர்த்த அனுமதி கோரி தமிழக அரசின் உள்துறை செயலாளரிடம் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, மல்ட்டிபிளக்ஸ் ஏ.சி.தியேட்டரில் ரூ 150 டிக்கெட் விலையை ரூ 250 ஆக உயர்த்த வேண்டும்.
புதிய மின் கட்டண உயர்வு ஜூலை மாதத்திற்கு கிடையாது? வெளியான முக்கிய அறிவிப்பு!!!
ஏ.சி. இல்லாத திரையரங்குகளில் குறைந்தபட்ச கட்டணத்தை ரூ. 150 ஆக உயர்த்த வேண்டும். மேலும் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் ஏ.சி. இல்லாத தியேட்டர்களில் கட்டணத்தை ரூ. 80 லிருந்து ரூ.120 ஆக உயர்த்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர். இதை கேட்ட ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.