செந்தில் பாலாஜி வழக்கு விவகாரம்.., மீண்டும் விசாரணையை தொடங்கிய சென்னை ஐகோர்ட்!!!

0
செந்தில் பாலாஜி வழக்கு விவகாரம்.., மீண்டும் விசாரணையை தொடங்கிய சென்னை ஐகோர்ட்!!!
செந்தில் பாலாஜி வழக்கு விவகாரம்.., மீண்டும் விசாரணையை தொடங்கிய சென்னை ஐகோர்ட்!!!

அமைச்சர் செந்தில் பாலாஜி ஆட்கொணர்வு வழக்கு விசாரணை இன்று முடிவுக்கு வருகிறது. கடைசி கட்ட விசாரணை இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நடக்கிறது. அதாவது செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட நிலையில், அவரின் மனைவி மேகலாவின் ஆட்கொணர்வு மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்து விசாரணை செய்யப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து அமலாக்கத்துறை கடந்த 11, 13ம் தேதி தங்களது வாதங்களை முன்வைத்தன.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

எனவே இதற்கு முன் இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கிய நிலையில், மூன்றாவது நீதிபதி சி வி கார்த்திகேயன் முன் வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது. அதன் படி சென்னை ஐகோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணைக்கு வரும் இந்த வழக்கில் செந்தில் பாலாஜியின் மனைவி தரப்பு பதில் வாதம் இன்று பதிவு செய்யப்படுகிறது. எனவே செந்தில் பாலாஜி வெளியாகும் தேதி குறித்து தீர்ப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here