தமிழக பள்ளிகள் கவனத்திற்கு.., இதை கட்டாயம் செய்ய வேண்டும்.., அமைச்சர் அன்பில் மகேஷ் அதிரடி உத்தரவு!!!

0

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர்களின் கல்வித் திறனை அதிகரிக்கவும் அவர்களை ஊக்குவிக்கவும் பள்ளி கல்வித்துறை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் நடப்பு ஆண்டு முதல் அனைத்து அரசு நடுநிலைப் பள்ளிகளில் 8,209 உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள், தொடக்கப் பள்ளிகளில் 22,1931 ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்க திட்டமிட்டுள்ளனர். இதற்கான பணிகளும் விரைவில் தொடங்க உள்ளது.

இந்நிலையில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அனைத்து அரசு பள்ளிகளுக்கும் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதாவது இந்த ஆண்டு தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு பல சலுகைகள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Enewz Tamil WhatsApp Channel 

தமிழக பள்ளி மாணவர்களுக்கான “இலவச மடிக்கணினி திட்டம்”., நிதியமைச்சரே வெளியிட்ட அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here