பால் பாக்கெட் விலை லிட்டருக்கு ரூ. 6 உயர்த்தப்பட்டிருப்பதாகவும், இந்த புதிய கட்டணம் கேரளாவில் வரும் டிசம்பர் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
புதிய தகவல்:
பால் பாக்கெட்களின் விலை சமீப நாட்களாக, பல்வேறு மாநிலங்களில் உயர்த்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் கொள்முதல் மற்றும் விற்பனை பால் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது கேரளாவின் திருவனந்தபுரத்தில், மில்மா பால் பாக்கெட்களின் விலை லிட்டருக்கு 6 ரூபாய் உயர்த்தப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இதற்கு முன்னதாக சம்பந்தப்பட்ட நிறுவனம் லிட்டருக்கு ரூ.8.87 காசுகள் உயர்த்த கோரிக்கை வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 6 ரூபாய்க்கு அரசு அனுமதி வழங்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதை வைத்துப் பார்க்கும்போது இந்த புதிய கட்டணம் மாநிலத்தில், வரும் டிசம்பர் 1 முதல் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வேலையில்லா VIPகளுக்கு இந்த முறை 100% வேலை உறுதி., அரசின் 3 மாஸ்டர் பிளான்! விவரம் உள்ளே!!
கேரளாவை தொடர்ந்து கர்நாடகாவிலும், பால் பாக்கெட் களின் விலையை லி 3 ரூபாய் அதிகரிக்க முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. விரைவில் இது குறித்த அறிவிப்பை கர்நாடக முதல்வர் பிரசவராஜ் பொம்மை வெளியிடுவார் என பால் முகவர்கள் சங்கம் எதிர்பார்த்து வருகிறது.